கரூரில் சாரல்மழை

கரூர், டிச. 29:கரூரில் மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசான அளவில் சாரல் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலும், அதிகாலை நேரத்தில் வாட்டி வதக்கும் பனியும் என்ற சீதோஷ்ணநிலையில் கரூர் இருந்தது.

இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில பகுதிகளில் லேசான அளவில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், கரூர் மற்றும் சில பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை அவ்வப்போது மிகவும் லேசான அளவில் சாரல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: