திருப்பூர்,டிச.28: திருப்பூர் ராயபுரம் ரோடு, ஜெய்வாபாய் பள்ளி அருகில் மந்த கதியில் நடைபெறும் சாக்கடை கால்வாய் கட்டுமான பணியால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருப்பூர் ராயபுரம் பகுதியில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு அருகாமையில் மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் கட்டுமான பணி கடந்த பல மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து துண்டித்து வேறு பாதையில் மாற்றி விட்டனர்.