தேசிய விளையாட்டு போட்டிகளில் களரிப்பயட்டை சேர்த்தற்கு சத்குரு வாழ்த்து

கோவை,டிச.27: கோலோ இந்தியா விளையாட்டு திட்டத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரிய கலையான களரிப்பயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சத்குரு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘ களரிப்பயட்டு ரத்தத்தை துள்ளச்செய்யும் மண்சார்ந்த விளையாட்டு. இதற்கு உலகில் சரியான இடம் கிடைக்க வேண்டும். இவ்விளையாட்டிற்கு அதிக உடல் திறனும் மன ஒழுக்கமும் தேவை.

இதை தேசிய விளையாட்டு போட்டிகளில் சேர்த்திருப்பது, கிராம மக்கள் பங்கேற்க அவர்களுக்கு மேலும் பெரும் ஊக்கத்தை கொடுக்கும்’ என தெரிவித்துள்ளார். மேலும், ஈஷா கிராமோத்ஸவம் என்ற பெயரில் தமிழக கிராமங்களில் இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் விளையாட்டு போட்டிகளை ஊக்குவித்து வரும் ஈஷாவுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சகம், ‘ கேல் புரோத்சாஹான் புரஸ்கார்’ விருதை வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: