திருப்பூர், டிச. 25: தமிழ்நாடு தையல் நூல் வியாபாரிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் வாலிபாளையம் சேம்பர் ஹாலில் சங்கத் தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். கூட்டத்தில், சங்கத்தின் புதிய தலைவராக பரமசிவம், ெசயலாளராக ஜெயக்குமார், பொருளாளராக பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர்களாக சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, துணைச் செயலாளர்களாக சுப்பிரமணியம், மூர்த்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.