சட்ட விரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனைக்கு சீல்

சேலம்: சேலம் எடப்பாடியில் கருவில் உள்ள குழந்தை பாலினத்தை ஸ்கேன் செய்து தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண் ஒருவரை ஸ்கேன் செய்ய அனுப்பி வைத்து, திடீரென உள்ளே நுழைந்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர் சுகாதாரத்துறை அதிகாரிகள். மருத்துவர் கண்ணன், அவரது மனைவி ஜோதி, மேகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்..

Related Stories: