ராஜபாளையம், டிச. 25: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ராஜபாளையம் கோதண்டராமர் கோயிலில் ஆயிரம் கிலோ பூக்கள் கொண்டு அலங்கரிக்க பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். ராஜபாளையம் - தென்காசி சாலையில் பழமையான கோதண்டராமர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் கோயில் அடைக்கப்பட்டு சாமி தரிசனத்துக்கு அனுமதிக்காமல் இருந்தது.