கரூர், டிச. 24: கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச் சட்டம் 1972ன்படி தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தொழிலாளர் நலநிதிச் சட்டம் 1972 பிரிவு 2(டி)ன்படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், ஐந்தும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ. 10, ஒவ்வொரு தொழிலாளிக்கு வேலையளிப்பவர் பங்காக ரூ. 20ம் சேர்த்து மொத்தம் ரூ. 30வீதம் தொழிலாளர் நல நிதி பங்கு தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி, 2020ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை ஜனவரி 2021ம் ஆண்டு ஜனவரி 31ம்தேதிக்குள் வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.