கேஸ் சிலிண்டர் உயர்வை ரத்து செய்யகோரி திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, டிச.22: கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், ரத்து செய்யக்கோரியும் திமுக மகளிரணியினர் புதுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டையில் திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திலகர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் ராஜேஸ்வரி, கமலா செல்வம், பிரபா ஆகியோர் தலைமை வகித்தனர். வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிதைப்பித்தன், செய்திதொடர்பு செயலர் பி.டி.அரசகுமார், சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் த.சந்திரசேகரன், நகர செயலாளர் நைனாமுகமது, நிஜாம்காலனி சத்தியா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories: