தாராபுரம், டிச. 21: தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் 13வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். உப்பாறு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உப்பாறு அணைக்கு நீர் வழங்க கோரியும், பிஏபி பிரதான கால்வாயில் ராட்சத குழாய்களை பதித்து பல லட்சம் லிட்டர் தண்ணீரை கடத்தி விற்பனை செய்வதை கண்டித்தும், தண்ணீர் திருட்டுக்கு உடந்தையாக இருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும் தாராபுரத்தில் பாசன விவசாயிகளும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரும் இணைந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.