திருப்பூர், டிச. 21: திருப்பூர், பல்லடம் ரோடு, சந்தை பேட்டை எதிரில் உள்ள சிக்னல் இயங்காததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. திருப்பூரின் முக்கிய ரோடுகளில் ஒன்றாக உள்ளது பல்லடம் ரோடு. இந்த ரோட்டின் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகிறது. இந்தநிலையில் பல்லடம் ரோடு சந்தை பேட்டை பகுதியில் உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட் ஆகியவை செயல்பட்டு வருகிறது.