புதுக்கோட்டை, டிச.18: புதுகை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித் திருப்பதாவது: தமிழக அரசு விவசாயிகளை ஒன்றிணைத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கி, அவர்களை வேளாண் சாகுபடி மட்டுமல்லாது, வேளாண் வணிகத்தினை மேம்படச் செய்வதில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் வசதி அளித்து தொழில் துவங்க இடைநிலை மூலதன உதவி, கடன் உத்தரவாதம் மற்றும் சலுகையுடன் கூடிய சுழல் நிதி வழங்கும் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இடைநிலை மூலதனத்துடன் உதவித்தொகையானது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கிய உடன் நிறுவனங்களில் உள்ள மூலதன பங்களிப்பினை அதிகரிப்பதன் மூலம் ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் ரூ.10 லட்சம் வரை இடைநிலை மூலதனத்துடன் உதவித் தொகை வழங்கப்படும். இந்த தொகை மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் விளைபொருட்களை லாபகரமாக சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.