ஆரணி, டிச.18: ஆரணி அருகே விவசாய நிலம் வழியாக சடலம் எதிர்ப்பு தெரிவித்த தகராறில் இளம்பெண்ணின் மண்டை உடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மட்டதாரி ஊராட்சி மைனந்தல் கிராமத்தில் இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய 2 கி.மீ. தொலைவில் சுடுகாடு உள்ளது. சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் அங்குள்ள விவசாய நிலங்கள் வழியாக சடலத்தை எடுத்து செல்லும் நிலை உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், பாதை அமைக்கவில்லை. இந்நிலையில், மைனந்தல் கிராமத்தை சேர்ந்த மோகன் மனைவி சுதா(39) என்பவர் உடல் நலக்குறைவால் நேற்று இறந்தார். அவரது சடலத்தை சவுந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் வழியாக எடுத்து சென்றனர்.