திருப்பூர், டிச 16; டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் எஸ்.ஏ.பி. தியேட்டர் பகுதியில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாநகர செயலாளர் கணேசன் தலைமை வகித்தார்.
இதில் மாநில குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உண்ணிகிருஷ்ணன், தெற்கு மாநகர செயலாளர் ஜெயபால் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், கார்ப்பரேட் பொருட்களை புறக்கணிப்போம். விவசாய திருத்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்.