எம்எல்ஏ ராமர் ஆய்வு தென்னிலை அருகே மொபட் மீது கார் மோதி விபத்து

க.பரமத்தி, டிச.15: தென்னிலை அருகே கரைப்பாளையத்தில் மொபட் மீது கார் மோதியதில் முதியவர் காயமடைந்தார். க.பரமத்தி அடுத்த நாச்சிமுத்து நகரை சேர்ந்தவர் நாச்சிமுத்து மகன் மாரிமுத்து(63), வீட்டில் இருந்து மொபட்டில் புறப்பட்டு சொந்த வேலையாக சென்று விட்டு ஊருக்கு திரும்ப புறப்பட்டு வந்துள்ளார். கரைப்பாளையம் அருகே வந்தபோது எதிரே வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் காயமடைந்த மாரிமுத்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து தென்னிலை போலீசார் காரை இயக்கிய திலீப்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: