கோரிசோலை நீர்தேக்கத்தில் குதித்து இளைஞர் தற்கொலை

ஊட்டி, டிச. 11:  ஊட்டி அருகே கெல்சா அவுஸ் பகுதியை சேர்ந்த விஜயராஜன் மகன் ரேவந்த் டேனியல்(23). இவர் டிப்ளமோ படித்துள்ளார். டேனியல் கடந்த ஒராண்டாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2ம் தேதி கோவையில் இருந்து வரும் தனது நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்ற ரேவந்த் டேனியல், வீடு திரும்பவில்லை. ரேவந்த்தின் தந்தை விஜயராஜன் ஊட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் போில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கோரிசோலை நீர்தேக்கத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏரியில் கிடந்தவர் ரேவந்த் டேனியல் என்பதும், படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த ரேவந்த் டேனியல் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: