ஊட்டி, டிச. 10: நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணிப்பார்வையாளர் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்கங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணிப்பார்வையாளர் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்கங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இளநிலை வரைதொழில் அலுவலர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், பணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர் காலிப்பணியிட விபரம், இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை இம்மாவட்டத்தின் www.nigiris.nic.in இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.