தண்டையார்பேட்டை: மண்ணடி டேவிட்சன் தெருவில் கொத்தவால்சாவடி காவல் நிலையம் அருகே பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இந்த கட்டிடம் முழுவதும் நனைந்து இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கட்டிடத்தின் பால்கனி திடீரென இடிந்து விழுந்ததில், காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ரோந்து பைக்குகள் இடிபாடுகளில் சிக்கி சேதமடைந்தன.