பொள்ளாச்சி, டிச.4: பொள்ளாச்சி கோவை ரோட்டில் உள்ள மண்டபத்தில் நேற்று முன்தினம், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. தாசில்தார் தணிகைவேல் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டாட்சியர் சரவணன், மாரீஸ்வரன், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயசித்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 269 வாக்குச்சாவடிகள் உள்ளன. கடந்த மாதம் 17ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, கடந்த 21 மற்றும் 22ம் தேதிகளில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திருத்தம், நீக்கல், புதிய வாக்காளர் சேர்ப்பது என சிறப்பு முகாம் நடைபெற்றது.