9.5 கிலோ கஞ்சாவுடன் கர்நாடக வாலிபர் கைது

அரூர், ஜூன் 18: அரூர் அருகே 9.5 கிலோ கஞ்சாவுடன் கர்நாடக வாலிபரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், அரூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா மற்றும் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மொரப்பூர் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில், 9.5 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர் கர்நாடகா மாநிலம் சிக்கமேகேரி பகுதியைச் சேர்ந்த பீமாப்பா(29) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 9.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

The post 9.5 கிலோ கஞ்சாவுடன் கர்நாடக வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: