டூவீலர் மீது கார் மோதி விவசாயி பலி

கிருஷ்ணகிரி, செப்.25: கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் மேல்கத்தாடி பகுதியை சேர்ந்தவர் ரவி (56), விவசாயி. இவர் கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலை, ஒரப்பம் கூட்ரோடு அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார், டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கந்திகுப்பம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post டூவீலர் மீது கார் மோதி விவசாயி பலி appeared first on Dinakaran.

Related Stories: