செண்டுமல்லி பூ கிலோ ₹5ஆக சரிவு

 

ராயக்கோட்டை, செப்.24: ராயக்கோட்டை பகுதியில் விளைச்சலாகும் பூக்கள் தரமானதாக உள்ளதால் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த மாதம் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இல்லாததால், பூக்களை வாங்க வியாபாரிகள் வராமல், பூ மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த மாதம் கிலோ சாமந்திப்பூ ₹200க்கு விற்பனையான நிலையில், நேற்று மஞ்சள் சாமந்தி கிலோ ₹40க்கும், செண்ட் மஞ்சள் சாமந்தி கிலோ ₹45க்கும், ₹80க்கும் விற்பனையானது. பட்டன் ரோஜா கிலோ ₹40க்கு விற்பனையானது. அதே போல கிலோ ₹40வரை விற்பனையான செண்டுமல்லிப்பூவை ₹5க்கு வியாபாரிகள் கேட்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விலை குறைந்ததால், சாகுபடி செய்த செண்டு மல்லிப்பூக்களை பறிக்காமல் விவசாயிகள் தோட்டத்திலேயே சிலர் விட்டுள்ளனர்.

The post செண்டுமல்லி பூ கிலோ ₹5ஆக சரிவு appeared first on Dinakaran.

Related Stories: