83வது வார்டு தாதாங்குப்பத்தில் ரேஷன் கடையை திறப்பேன்: திமுக வேட்பாளர் உஷா நாகராஜ் உறுதி

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலம் 83வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உஷா நாகராஜ், நேற்று தாதாங்குப்பம் பஜனை கோயில் தெரு, சாஸ்தா நகர், ராஜிவ்காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு பொதுமக்கள் மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வேட்பாளர் உஷா நாகராஜ் பொதுமக்களிடம் கூறுகையில், ‘‘அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ ஆகியோரின் ஒத்துழைப்புடன் தாதாங்குப்பத்தில் 10 ஆண்டுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாமல் மூடிக்கிடக்கும் ரேஷன் கடையை உடனடியாக திறந்து, தரமான ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுப்பேன். எனவே, எனக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின் போது, அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், வட்ட செயலாளர்கள் சீ.லோகநாதன், மு.விஜயகுமார், நிர்வாகிகள் பொற்செழியன், பாபு இளஞ்செழியன், மோகன்குமார், ராஜ்குமார், பிரகாசம், முருகன், கல்யாணகுமார், அமர், கிருஷ்ணன், லோகேஷ், கருணாநிதி, குமார், நாகராஜ், பிரகாஷ், தவமணி, லட்சுமி, உஷா, தரணி உள்பட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்….

The post 83வது வார்டு தாதாங்குப்பத்தில் ரேஷன் கடையை திறப்பேன்: திமுக வேட்பாளர் உஷா நாகராஜ் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: