16 ஆண்டு தலைமறைவு சாமியார் அதிரடி கைது

நெல்லை: நெல்லை மாவட்டம், நாங்குநேரி தாலுகா வடுகச்சிமதிலை சேர்ந்தவர் ராமையா என்ற ராமச்சந்திரன். இவரை கடந்த 2006ம் ஆண்டு திருட்டு வழக்கில் ஏர்வாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ராமையா என்ற ராமச்சந்திரன், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். விசாரணையில் ராமையா என்ற ராமச்சந்திரன், திருவண்ணாமலையில் சாமியாராக தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவண்ணாமலை சென்ற தனிப்படையினர் ராமையா என்ற ராமச்சந்திரனை கைது செய்தனர்.

The post 16 ஆண்டு தலைமறைவு சாமியார் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: