15 மாத குழந்தை மாரடைப்பால் உயிரிழப்பு

நாக்பூர்: வங்கதேசத்தை சேர்ந்த 15 மாத குழந்தை மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த 15 மாத பெண் குழந்தை தன் தாய், தந்தையுடன் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு சென்றுள்ளார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது மாரடைப்பால் குழந்தை மயங்கி விழுந்தது. உடனே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு விமானம் நாக்பூர் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டு, தரை இறக்கப்பட்டது. பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த குழந்தை நேற்று காலை உயிரிழந்தது.

The post 15 மாத குழந்தை மாரடைப்பால் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: