புதுச்சேரி, பிப். 26: இலவச அரிசி வழங்க கோரி வரும் 5ம் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அஜிஸ் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். மத்திய குழு உறுப்பினர் சுதா, மாநில குழு உறுப்பினர் பெருமாள், பிரதேச குழு உறுப்பினர் முருகன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், அபிஷேகம், ராமமூர்த்தி, திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ, துணை அமைப்பாளர் கென்னடி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கண்ணபிரான், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ பொழிலன், லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலசுப்பிரமணியன், மோதிலால், திராவிடர் கழகம் சிவ வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.