தொப்பம்பட்டி, தாழையூத்துவில் இன்று மின்தடை

பழநி, ஜூலை 24: மாதாந்திர பராமரிப்புப்பணி காரணமாக பழநி அருகே தொப்பம்பட்டி, தாழையூத்து பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்பட உள்ளது.

பழநி அருகே வாகரை மற்றும் தாழையூத்து உபமின் நிலையங்களில் இன்று (ஜூலை 24, புதன்) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை இம்மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வாகரை, மரிச்சிலம்பு, பூலாம்பட்டி, திருவாண்டபுரம், அப்பனூத்து, தொப்பம்பட்டி, வேலம்பட்டி, ஆலாவலசு, புங்கமுத்தூர், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, பூசாரிக்கவுண்டன்வலசு, தாழையூத்து, மொட்டனூத்து, வயலூர், சாமிநாதபுரம், கண்டியக்கவுண்டன்புதூர், புஷ்பத்தூர் மற்றும் லட்சலபட்டி ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் நிறுத்தப்படும். இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Related Stories: