திருவண்ணாமலை, ஜூலை 18: திருவண்ணாமலை அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி மாலை சிறுமி, வீட்டிற்கு அருகே சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருந்தார்.அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சுகந்தன்(19) என்பவர், சாக்லேட் வாங்கி தருவதாக கூறி சிறுமியை தனியே அழைத்து சென்றாராம். பின்னர், வீட்டிற்கு அருகே உள்ள மறைவான பகுதியில் சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ேமலும், இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால், கொலை செய்துவிடுவேன் என மிரட்டி சிறுமியை வீட்டிற்கு அனுப்பிவிட்டாராம்.