புற்றுநோய் கண்டறியும் முகாம்

அம்பை, மே 22:  அம்பையில் புற்றுநோய் கண்டறியும் இலவச விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது. கோபாலசமுத்திரம் கிராம உதயம் மற்றும் உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவனத்திற்குட்பட்ட நெல்லை கிளை கேன்சர் கேர் சென்டரும் இணைந்து பெண்களுக்கான இலவச புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் மற்றும் புற்றுநோய் தடுப்பு கருத்தரங்கை  சமுதாயக்கூடத்தில் நடத்தின. அம்பை கிராம உதயம் மையத்தலைவர் விஜயா தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். குழு தலைவர்கள் உஷாராணி, அற்புதமணி முன்னிலை வகித்தார்.

இலவச மருத்துவதுறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்றார். பகுதி பொறுப்பாளர்கள் இசக்கியம்மாள், அந்தோணியம்மாள், கோகிலா உள்ளிட்ட பலர் புற்றுநோய் வராமல் தடுப்பது குறித்து பேசினர். டாக்டர் ஜெயபாரதி தலைமையில் செவிலியர்கள் உள்ளிட்ட  மருத்துவ குழுவினர் முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினர். இதில் சுற்று வட்டார கிராம பகுதி பெண்கள் பலர் கலந்து கொண்டனர். இசக்கியம்மாள் நன்றி கூறினார்.

Related Stories: