அம்பை, மே 22: அம்பையில் புற்றுநோய் கண்டறியும் இலவச விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது. கோபாலசமுத்திரம் கிராம உதயம் மற்றும் உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவனத்திற்குட்பட்ட நெல்லை கிளை கேன்சர் கேர் சென்டரும் இணைந்து பெண்களுக்கான இலவச புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் மற்றும் புற்றுநோய் தடுப்பு கருத்தரங்கை சமுதாயக்கூடத்தில் நடத்தின. அம்பை கிராம உதயம் மையத்தலைவர் விஜயா தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். குழு தலைவர்கள் உஷாராணி, அற்புதமணி முன்னிலை வகித்தார்.