திருவள்ளூர், மே 21: திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு கிராமப்புறங்களில் இருந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற தினமும் ஏராளமானவர்கள் வருகின்றனர். ஆனால் போதிய மருத்துவர்கள் பணியில் இல்லாததால் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருக்கும் அவலம் ஏற்
பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் பல இடங்களில் தண்ணீர் வெளியேற முறையான வடிகால் இன்றி தெருக்களில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதில் உற்பத்தியாகும் கொசு கடிப்பதால் கடந்த ஒரு மாதமாக பல்வேறு நோய்கள் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தொடர் சளி என பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற தினமும் 2000க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இவர்கள் புறநோயாளிகள் சீட்டு பெற்று சிகிச்சை பெற்று செல்கின்றனர்.