ஒரத்தநாடு, மார்ச் 15: ஒரத்தநாடு பகுதியில் சாலையோரத்தை ஆக்கிரமித்து சிலர் வாடகைக்கு விட்டு பணம் வசூலிப்பது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்திலேயே மிக முக்கியமான நகராக கருதப்படும் ஒரத்தநாட்டில் பைபாஸ் சாலையில் பெரியார் சிலையில் துவங்கி அரசு மகளிர்; கலைக்கல்லூரி வளாகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகம், நில அளவையர் பயிற்சி மைய வளாகம், புதிய நீதிமன்ற கட்டிட வளாகம், நீதிபதி குடியிருப்பு மற்றும் நூலக வளாகம். அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வளாகம் உள்ளது. இந்த பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோர பகுதிகள் ஒரத்தநாடு அதிமுகவினராலும், கட்டப்பஞ்சாயத்து செய்வோர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.