புதுச்சேரி, மார்ச் 15: புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் சிறப்பாக செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சுயேட்சையாக தேர்தலில் நிற்க விரும்புவோருக்கும் விளக்க நிகழ்வு இன்று (15ம் தேதி) மாலை 5 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடக்கிறது. இப்பயிற்சி முகாமில் மாவட்ட தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் உள்ள பல்வேறு அதிகாரிகள், வேட்பு மனு தாக்கலுக்கு ஏதுவாக செய்யப்பட்டுள்ள வசதிகள், தேர்தலுக்கான கட்டுப்பாடுகள், நேர்மையாக வாக்களித்தல், பொதுமக்கள் குறைதீர்த்தல், மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள்,