வி.கே.புரத்தில் நூலக விழிப்புணர்வு கூட்டம்

வி.கே.புரம், மார்ச் 15:  வி.கே.புரம் அரசு கிளை நூலகம், வாசகர் வட்டம் சார்பில் மாணவர்களுக்கு நூலக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஓய்வுபெற்ற பேராசிரியர் வல்சகுமார் தலைமை வகித்தார். நூலகர் குமார் வரவேற்றார். இதில் வாசகர் வட்ட இணை செயலாளர் முத்துராமலிங்கம், ஆசிரியர்கள் சுமதி, மாரியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நூலகம் தொடர்பான கருத்துகளை விளக்கினர்.  இதில் நூலக சம்பந்தமான கேள்விகள் கேட்கப்பட்டு பதில் கூறிய மாணவர்களுக்கு வாசகர் வட்டம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மூத்த வாசகர் பழனி நன்றி கூறினார். ஏற்பாடுகளை நூலக உதவியாளர் கைலாசம், கோமதி மற்றும் வாசகர் வட்டத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: