ஐன்ஸ்டீன் கல்லூரி ஆண்டு விழா

நெல்லை, மார்ச் 15:  சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2ம் ஆண்டு விழா நடந்தது. கல்லூரி செயலாளர் எழில்வாணன் தலைமை வகித்தார். முதல்வர் முருகேசன் முன்னிலை வகித்தார். மாணவி ரம்யா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தென்காசி எம்கேவிகே மெட்ரிக். பள்ளி முதல்வர் அந்தோனி பால்ராஜிம், கவுரவ விருந்தினராக ஜெயேந்திரா சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் ஜூப்ளி மெட்ரிக். பள்ளி முதல்வர் உஷா ராமனும் கலந்து கொண்டனர். விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பருவத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும், அதிக தேர்ச்சி பெற்று தந்த பேராசிரியர்களுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதேபோல் விளையாட்டு மற்றும் பன்முகத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மாணவி மகாலட்சுமி தாரணி நன்றி கூறினார்.

Related Stories: