தட்டாஞ்சாவடியில் ஆக்கிரமிப்பு மதில்சுவர் இடிப்பு

புதுச்சேரி,  மார்ச் 8: புதுவை தட்டாஞ்சாவடி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் அருகே  இத்துறைக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. வீட்டுவசதி வாரிய பயன்பாட்டிற்காக  இந்நிலம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், சிலர் இதை ஆக்கிரமித்து  காம்பவுன்ட் சுவர் கட்டியிருந்தனர். இதை அகற்ற மாவட்ட நிர்வாகத்திடம்,  துறை இயக்குனர் முறையிட்டிருந்த நிலையில் அதற்கான முதல்கட்ட நடவடிக்கை  கடந்த காலங்களில் எடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது. இதனிடையே கடந்த  28ம்தேதி எதிர்தரப்பினரின் மனு கோர்ட்டில் தள்ளுபடி ஆனது.

இதையடுத்து  ஆக்கிரமிப்பு மதில்சுவரை இடிக்க சப்-கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்ட  நிலையில் தாசில்தார் சுரேஷ்ராஜன் தலைமையிலான குழுவினர் நேற்று பொக்லைன்  எந்திரம் மூலம் அதை இடித்து அகற்றினர். இதையொட்டி அங்கு ேகாரிமேடு போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: