தடுப்புக்கட்டையில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்த லாரி

பாகூர், மார்ச் 7:  பாகூர் அருகே தடுப்புக்கட்டையில் மோதி நடுரோட்டில் டிப்பர் லாரி கவிழ்ந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் வெடலை கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். டிப்பர் லாரி டிரைவர். நேற்று அதிகாலை இவர், திருவக்கரையில் இருந்து எம்சாண்ட் மணல் ஏற்றிக் கொண்டு கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் சென்றபோது, சாலையின் நடுவில் இருந்த தடுப்புக் கட்டையில் டிப்பர் லாரி மோதி கவிழ்ந்தது. இதனால் மணல் முழுவதும் சாலையில் கொட்டிக் கிடந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டிரைவர் தூக்க கலக்கத்தில் ஓட்டியதால் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: