பாஜக பிரமுகர் கார் உடைப்பு ஆறு பேரிடம் விசாரணை

திருப்பூர்,பிப்.14: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கொடிக்கம்பள் பவானி நகரை சேர்ந்த முனீஸ்வர பாண்டியராஜன்(39) பா.ஜனதா கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார். பிரதமர் மோடி திருப்பூர் வருகையொட்டி தனது நண்பரின் காரை கடந்த சில நாட்களாக பயன்படுத்தி வந்தார். பா.ஜனதா கட்சி அலுவலகத்தின் முன் காரை நிறுத்திவிட்டு பக்கத்தில் உள்ள தனது வீட்டிற்குசென்றார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை  மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து காரை சேதப்படுத்தினர். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது, அதில் 6 பேர் கொண்ட மர்ம  கும்பல் உருட்டு கட்டையால் காரின் கண்ணாடியை உடைப்பது தெரியவந்தது.

இந்நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர்களின் அடையாளத்தை மையமாக கொண்டு அப்பகுதியை சேர்ந்த சந்தோஷ், பாலா, கார்த்திக், மோகன் உட்பட 6 பேரை வடக்கு போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: