திருப்பூர்,பிப்.14: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கொடிக்கம்பள் பவானி நகரை சேர்ந்த முனீஸ்வர பாண்டியராஜன்(39) பா.ஜனதா கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார். பிரதமர் மோடி திருப்பூர் வருகையொட்டி தனது நண்பரின் காரை கடந்த சில நாட்களாக பயன்படுத்தி வந்தார். பா.ஜனதா கட்சி அலுவலகத்தின் முன் காரை நிறுத்திவிட்டு பக்கத்தில் உள்ள தனது வீட்டிற்குசென்றார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து காரை சேதப்படுத்தினர். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.