ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேர் மீது வழக்குபதிவு

புதுச்சேரி,  பிப். 14:  புதுவை, சுப்பையா நகர், 8வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர்  முனியன் (58). புதிய பஸ் நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் வண்டி ஓட்டி வருகிறார்.  இவர்களுக்கு எதிரே உள்ள மற்றொரு சங்க ஆட்டோ ஸ்டாண்டில் அறிவழகன், சுரேஷ்  உள்ளிட்டோர் ஆட்டோ ஓட்டி வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று முனியன்,  பஸ் நிலையத்தில் இருந்து கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சவாரி ஏற்றி  வந்தாராம். அப்போது அங்கு நின்றிருந்த அறிவழகன், சுரேஷ் ஆகியோர் அவரை  அசிங்கமாக திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து முனியன் அளித்த  புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் 2 பேர் மீதும் வழக்குபதிந்து விசாரித்து  வருகின்றனர்.

Related Stories: