தொழிலாளியை தாக்கியவர் கைது

மானூர், பிப்.13:  மானூர் அருகேயுள்ள களக்குடியைச் சேர்ந்த சிவனு மகன் சிவனார் (55). தொழிலாளியான இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த பட்டமுத்து மகன் பால்சாமி (47)  என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று தெருவில் நின்று கொண்டிருந்த சிவனாரிடம் அங்கு வந்த பால்சாமி தகாத வார்த்தைகளால் பேசி கம்பால் சராமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் பலத்த காயமடைந்த சிவனார் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த  புகாரின் பேரில் மானூர் எஸ்.ஐ அருண்நாராயணன் விசாரணை நடத்தி பால்சாமி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தார்.

Related Stories: