பந்தலூர், ஜன.22: பந்தலூர் அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயால் நேற்று யானைகள் அரசு தேயிலைத்தோட்டத்தில் முகாமிட்டன. இதனால் தோட்ட ெதாழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடும் உறைபனி பெய்து வருகிறது. அேதபோல் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வனப்பகுதியில் புற்கள், செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. இதனால் எளிதில் காட்டு தீ பரவும் அபாயம் இருந்து வந்தது. மேலும் காட்டு தீயை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.