புதுச்சேரி, ஜன. 10: புதுச்சேரி மத்திய தபால் நிலைய ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து தபால் நிலையத்தை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொழிலாளர் உரிமைகளை பரிக்கும் செயலில் ஈடுபட்டு வரும் மத்திய பாஜ அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் கடந்த 2 நாளாக பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். புதுவையில் நேற்றுமுன்தினம் முழுஅடைப்பு நடைபெற்றது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று 2வது நாளாக பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் புதுவையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சலக ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.