சிறுமி மாயம்

புதுச்சேரி, டிச. 11:  புதுவை, அரியாங்குப்பம், ராம்சிங் நகரைச் சேர்ந்தவர் ஜான் அந்தோணி (45), தொழிலாளி. இவரது மகள் ஜான்

பியர் தெரசா (16). படிக்காமல் வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். அவரை தாய் தமிழரசி மற்றும் உறவினர்கள் பலஇடங்களில் தேடி அலைந்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து அரியாங்குப்பம் போலீசில் தமிழரசி முறையிட்டார். அதன்

பேரில் வழக்குபதிந்த உதவி சப்இன்ஸ்பெக்டர் அன்பரசன் தலைமையிலான போலீசார், மாயமான சிறுமியை தேடி வருகின்றனர். அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

Related Stories: