சூளகிரி, டிச.7: உத்தனப்பள்ளிசீபம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாது மகன் திருமல்லேஷ்(18). மனநலம் பாதிக்கப்பட்டவரான இவர், நேற்று முன்தினம், லாரி டியூப் உதவியுடன் தென்பெண்ணை ஆற்றில் இறங்கியபோது, திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் திருமல்லேஷ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார்.