உடுமலை, டிச.7: உடுமலையில் பிளாஸ்டிக் கழிவில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படுகிறது. இதை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சுல்தானா நேற்று ஆய்வு செய்தார். உடுமலையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் உரமாக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பொருட்டு சிமெண்ட் தொழிற்சாலைக்கு எரிபொருளாக அனுப்பப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் கழிவில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் வகையில், புதிய முயற்சியாக நகராட்சி உரக்கிடங்கில் பைரோலிசிஸ் பிளாண்ட் அமைக்கப்படுகிறது.