விஷம் குடித்த தொழிலாளி சாவு

வீரவநல்லூர், டிச. 6:  பொழிக்கரையை  சேர்ந்த ரத்தினசாமி மகன் ஆறுமுகப்பெருமாள் (26). இவரது மனைவி கலைச்செல்வி (23). இவர்களுக்கு 4 மற்றும் ஒரு வயதில் 2 மகன்கள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஆறுமுகபெருமாள் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்தார். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: