திருக்கனூர், டிச. 6: திருக்கனூர் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றில் மாட்டுவண்டிகளில் மணல் அள்ளுவதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கொ.மணவெளி பகுதியில் ஒருவர் மாட்டுவண்டியில் மணல் அள்ளிவந்தார். போலீசார் அவரை தடுத்தபோது மாட்டுவண்டியை ஓட்டி வந்தவர் வண்டியை விட்டு விட்டு தப்பியோடினார். போலீசார் மணலுடன் மாட்டுவண்டியை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் விசாரித்தபோது தப்பியோடியவர் திருக்கனூர் அருகே உள்ள தமிழக பகுதியான வடக்குப்பாளையத்தை சேர்ந்த ஆண்டவர் (45) என தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.