கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் தூக்குபோட்டு சாவு

புதுச்சேரி, டிச. 6:  அரியாங்குப்பத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். புதுவை,  அரியாங்குப்பம், கோட்டமேடு, ராகவசெட்டியார் வீதியில் வசித்தவர் சந்திரவதனி  (62). 15 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த இவர், 3 மகள்கள், ஒரு மகனும்  வாழ்ந்து வந்தார். இதில் 3 மகள்களுக்கும் திருமணமாகி வெளியே சென்று விட்ட  நிலையில் மகனுடன் சந்திரவதனி வசித்து வந்தார்.கணவரை பிரிந்த அவருக்கு,  மகள்களும் வெளியே சென்று விட்டதால் தனிமையில் இருப்பதாக விரக்தியடைந்ததாக  கூறப்படுகிறது. இதுபற்றி தனது உறவினர்களிடம் அடிக்கடி சொல்லி அவர் புலம்பி  வந்தாராம்.சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு  தற்கொலை செய்தார். இதுகுறித்து அவரது மகன் ஜெய்கணேஷ் அளித்த புகாரின்பேரில்  அரியாங்குப்பம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: