கூடலூர், நவ. 14: சாலை போக்குவரத்து பிரச்னை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் எம்எல்ஏ திராவிடமணி தலைமையில் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் நடந்தது.
ஆர்டிஓ முருகையன்(பொறுப்பு), கூடலூர் டிஎஸ்பி ஜெய்சிங், தாசில்தார் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூடலூர் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அய்யர்சாமி, எஸ்ஐ சத்தியன், தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரேம்குமார், நகர திமுக செயலாளர் ராஜேந்திரன், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உ ள்ளிட்டோர் பங்கேற்றனர்.