தீபாவளியன்று ரோந்து பணியிலிருந்த போலீசாருக்கு இனிப்பு வழங்கிய டிஜிபி

புதுச்சேரி, நவ. 8: தீபாவளி தினத்தில் ரோந்து வந்த டிஜிபி சுந்தரி நந்தா பணியிலிருந்த போலீசாருக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

 புதுவையில் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கண்காணிப்பு பணிக்காக போலீசார் ஆங்காங்கே ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். உச்சநீதிமன்ற உத்தரவை மீறி யாராவது பட்டாசு வெடிக்கிறார்களா? என கண்காணித்தும் வந்தனர்.

 இதனிடையே டிஜிபி சுந்தரி நந்தா, தீபாவளியான திடீரென நகர்வலம் வந்தார். அப்போது சாலையில் பணியிலிருந்த ஒதியஞ்சாலை காவலர்களை சந்தித்து அவர்களுக்கு இனிப்பு வழங்கிய டிஜிபி, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அவர்களின் குடும்பத்தாருக்கும் டிஜிபி தீபாவளி வாழ்த்துக்களை கூறினார். இதுதவிர ஆங்காங்கே நின்றிருந்த பொதுமக்கள், துப்புரவு பணியாளர்களுக்கும் அவர் தீபாவளி வாழ்த்துக்களை கூறி இனிப்புகளை வழங்கினார்.

 முன்னதாக நேருவீதியில் உள்ள போக்குவரத்து கிழக்கு காவல் சரக பிரிவுக்கு சென்ற டிஜிபி, அங்கு பணியிலிருந்த இன்ஸ்பெக்டர்கள் முருகையன், ஜெயராமன் மற்றும் போலீசாருக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்து கூறினார்.

 கடந்த ஆண்டு டிஜிபியாக இருந்த சுனில்குமார் கவுதமும் இதேபோல் தீபாவளியன்று பணியிலிருந்த காவலர்களை சந்தித்து சுவீட்ஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: