பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் இன்று மின்நிறுத்தம்

பெரம்பலூர்,அக்.30:  எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய 2 துணை மின்நிலையங்க ளில், இன்று (30ம்தேதி) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என்று உதவி செயற்பொறியாளர் முத்தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இன்று (30ம்தேதி) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும்வரை கிருஷ்ணாபுரம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம், வெங்கலம், வெங்கனூர், தழுதாழை, தொண்டமாந்துறை, பூஞ்சோலை, விஜயபுரம், முகமதுபட்டிணம், அரசலூர், அன்னமங்கலம், ஈச்சங்காடு, விசுவக்குடி, பெரிய வடகரை, வெண்பாவூர், நெற்குணம், கைகளத்தூர், பில்லங்குளம், அய்யனார்பாளையம், உடும்பியம் கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது.

இதேபோல் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட, எசனை துணை மின்நிலைய த்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (30ம்தேதி) காலை 9 மணிமுதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை எசனை துணை மின் நிலையத்திற்குட்பட்ட கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலை சந்து,

அனுக்கூர், சோமண்டாபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே. புதூர், மேலப்புலியூர், நாவலூர் கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆண்டிமடம்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் துணைமின் நிலையங்களிலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரிய கிருஷ்ணாபுரம், பெரியதத்தூர், வரதராஜன்பேட்டை, அகரம், அழகாபுரம், திராவிடநல்லூர், சூரகுழி, கூவத்து£ர், இராங்கியம், பெரியகருக்கை,மற்றும் திருராமன் ஆகிய பகுதிகளிலும், பாப்பாகுடி துணை மின் நிலையத்தில்  மின்சாரம் விநியோகிக்கபடும் பகுதிகளான பாப்பாகுடி, மேலணிகுழி, பாப்பாகுடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, பிள்ளைபாளையம், குலோத்துங்கநல்லூர், தென்னவநல்லூர், அழகர்கோவில், சலுப்பை, வேம்புகுடி, வங்குடி, இறவாங்குடி, வெத்தியார்வெட்டு, இருதயபுரம், இளையபெருமாள்நல்லூர், கங்கைகொண்டசோழபுரம், வீரபோகம், காட்டுகொல்லை, குறுக்குரோடு, அய்யப்பநாயக்கன்பேட்டை, திருக்களப்பூர்,

கோவில்வாழ்க்கை, நெட்டலகுரிச்சி, வீரசோழபுரம், வளவனேரி, ஆகிய பகுதிகளிலும் ஓலையூர் துனைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகிக்கபடும் பகுதிகளான பெரியாத்துகுரிச்சி, ஓலையூர் விழுதுடையான் ஆகிய பகுதிகளிலும், அய்யூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான காங்குழி, குளத்தூர், காட்டாத்தூர், இடையக்குறிச்சி, வல்லம், சிலம்பூர், புக்குழி ஆகிய பகுதிகளிலும் இன்று (30ம் தேதி) காலை 9மணிமுதல் மாலை பணி முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories: