வாலிபர் தற்கொலை

புளியங்குடி, அக். 17:  புளியங்குடி அருகே உள்ள அய்யாபுரம் அன்னை இந்திரா காலனியைச் சேர்ந்த குமார் மகன் துரைப்பாண்டி (25). தந்தையுடன் விவசாய வேலைகளை கவனித்து வந்தார். சில நாட்களாக விவசாயத்தை கவனிக்காமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இதை தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த துரைப்பாண்டி கடந்த 14ம் தேதி விஷம் குடித்தார். அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து புளியங்குடி எஸ்ஐ சண்முகவேல் விசாரித்து வருகிறார்.

Related Stories: